எப்போதெல்லாம் ஓர் உலகளாவிய தொற்றுநோய், பூகம்பம், சூறாவளி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உலகம் எப்போது முடிவடையும் என்று மக்கள் வியக்கின்றனர். இது ஒரு முக்கியமான கேள்வி, இதைப் புறக்கணிக்க முடியாது. சிலர் மரிக்க பயப்படுவதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். மற்றவர்கள் நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி பயப்படுகிறார்கள், இன்னும் சிலர், நாம் இருக்கும் இந்த அசிங்கமான குழப்பத்தை தேவன் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், மனிதன் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும்படி அவருடைய அன்பு மற்றும் நீதியின் இராஜ்ஜியத்தை அவர் கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்நோக்குகிறார்கள்.